தொழிலாளர் உரிமைகள் மற்றும் கட்டளைச்சட்டங்கள் தொடர்பில் பிரதான தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (17) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடினர்.
தொழிலாளர் உரிமைகளை மேலும் பாதுகாப்பது மற்றும் அதிகாரமளிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதோடு, இவ்வேலைத்திட்டம் குறித்து சமூக கருத்தாடல் உருவாக்க வேண்டும் எனவும் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.
இதுவொரு சமூக உரையாடலுக்கு அப்பால் சமூக உடன்பாட்டை நோக்கி இட்டுச்செல்வதாக அமைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார். இதன் ஊடாக தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்படல், இதற்காக முன்வருதல் என்பன இடம்பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பது குறித்து கலந்துரையாடல் samugammedia தொழிலாளர் உரிமைகள் மற்றும் கட்டளைச்சட்டங்கள் தொடர்பில் பிரதான தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (17) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடினர்.தொழிலாளர் உரிமைகளை மேலும் பாதுகாப்பது மற்றும் அதிகாரமளிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதோடு, இவ்வேலைத்திட்டம் குறித்து சமூக கருத்தாடல் உருவாக்க வேண்டும் எனவும் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.இதுவொரு சமூக உரையாடலுக்கு அப்பால் சமூக உடன்பாட்டை நோக்கி இட்டுச்செல்வதாக அமைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார். இதன் ஊடாக தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்படல், இதற்காக முன்வருதல் என்பன இடம்பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.