கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான இஷாரா எனப்படும் பெண்ணை கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரிக்கு உதவியாக இருந்த முக்கிய சந்தேக நபர், இஷாரா செவ்வந்தி என்ற 25 வயதுடைய பெண் இதுவரை கைது செய்யப்படவில்லை
இந்நிலையில் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரூ.1.2 மில்லியன் ரொக்கப் பரிசு வழங்க பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது.
தகவல்களை வழங்குவதற்கு தொலைபேசி எண்கனையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில்
கொழும்பு குற்றப்பிரிவு பணிப்பாளர்- 071-8591727
கொழும்பு குற்றப்பிரிவு OIC - 071-8591735
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தகவல்களை வழங்குபவர்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தி எங்கிருக்கிறார் தெரியுமா - தகவல் தருபவர்களுக்கு 12 இலட்சம் சன்மானம் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான இஷாரா எனப்படும் பெண்ணை கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரிக்கு உதவியாக இருந்த முக்கிய சந்தேக நபர், இஷாரா செவ்வந்தி என்ற 25 வயதுடைய பெண் இதுவரை கைது செய்யப்படவில்லை இந்நிலையில் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரூ.1.2 மில்லியன் ரொக்கப் பரிசு வழங்க பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது. தகவல்களை வழங்குவதற்கு தொலைபேசி எண்கனையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கொழும்பு குற்றப்பிரிவு பணிப்பாளர்- 071-8591727கொழும்பு குற்றப்பிரிவு OIC - 071-8591735 இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தகவல்களை வழங்குபவர்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.