• May 17 2024

தூக்க கலக்கத்தால் ஏற்பட்ட விபரீதம் - சாரதி வைத்தியசாலையில்! - மன்னாரில் சம்பவம் samugammedia

Chithra / May 7th 2023, 5:39 pm
image

Advertisement

மன்னார், தள்ளாடிக்கும் பெரிய பாலத்துக்கும் இடையே உள்ள பகுதியில் கப் ரக வாகனமொன்று வீதியோர கற்களில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மன்னார், சிலாவத்துறை, வேப்பங்குளம் பகுதியில் இருந்து குறித்த கப் வாகனத்தில் கடலுணவுகளை ஏற்றி வந்துள்ளனர்.


இதன்போது கப் வாகன சாரதி தூக்க கலக்கத்தில் குறித்த வாகனத்தை செலுத்த, அது, வீதியோர கற்களில் மோதி தடம் புரண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கப் சாரதி காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


தூக்க கலக்கத்தால் ஏற்பட்ட விபரீதம் - சாரதி வைத்தியசாலையில் - மன்னாரில் சம்பவம் samugammedia மன்னார், தள்ளாடிக்கும் பெரிய பாலத்துக்கும் இடையே உள்ள பகுதியில் கப் ரக வாகனமொன்று வீதியோர கற்களில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மன்னார், சிலாவத்துறை, வேப்பங்குளம் பகுதியில் இருந்து குறித்த கப் வாகனத்தில் கடலுணவுகளை ஏற்றி வந்துள்ளனர்.இதன்போது கப் வாகன சாரதி தூக்க கலக்கத்தில் குறித்த வாகனத்தை செலுத்த, அது, வீதியோர கற்களில் மோதி தடம் புரண்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கப் சாரதி காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அத்தோடு, இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement