யாழ் குடாநாட்டில் முருங்கைக்காயின் விலை சடுதியாகச் சரிந்ததனால் அவை விற்பனையின்றி தேங்கியுள்ளன என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் வெப்பமான காலநிலைக்கு முருங்கைக்காய் அதிகளவில் விளைவதால் அவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
சந்தைகளில் முருங்கைக்காய் கிலோ 75 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் அவை விற்பனையின்றி கால்நடைத் தீவனத்துக்கே பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.