• May 01 2024

மதுபோதையில் உல்லாச பயணம்...! வவுனியாவில் சிக்கிய தனியார் பேருந்தின் சாரதி...!

Sharmi / Apr 15th 2024, 12:02 pm
image

Advertisement

வவுனியாவில் மதுபோதையில் தனியார் பேருந்தினை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் போக்குவரத்து பொலிஸாரினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது

அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையினையும் முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது மதுபோதையில் பேருந்தினை செலுத்திய குற்றச்சாட்டில் தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை குறித்த பேருந்தினையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மதுபோதையில் உல்லாச பயணம். வவுனியாவில் சிக்கிய தனியார் பேருந்தின் சாரதி. வவுனியாவில் மதுபோதையில் தனியார் பேருந்தினை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் போக்குவரத்து பொலிஸாரினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுஅந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையினையும் முன்னெடுத்திருந்தனர்.இதன் போது மதுபோதையில் பேருந்தினை செலுத்திய குற்றச்சாட்டில் தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அதேவேளை குறித்த பேருந்தினையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement