• May 01 2024

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் துமிந்த திஸாநாயக்க வெளிப்படை...!

Sharmi / Apr 18th 2024, 8:47 am
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி சார்பில் போட்டியிடவுள்ள  ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரையில் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவிடம் சுமார் 400 வழக்குகள் உள்ளன. 

எனவே, இவ்வாறானதொரு தருணத்தில், இவ்வாறான பல வழக்குகள் உள்ளவரின் அழைப்பின் பேரில், நாட்டின் நீதியமைச்சர் நாற்காலியின் மறுபக்கம் வந்து அமர்ந்திருப்பது எந்தளவுக்கு நியாயம் என நாட்டு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதேவேளை எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் நாங்கள் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.


சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் துமிந்த திஸாநாயக்க வெளிப்படை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி சார்பில் போட்டியிடவுள்ள  ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரையில் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவிடம் சுமார் 400 வழக்குகள் உள்ளன. எனவே, இவ்வாறானதொரு தருணத்தில், இவ்வாறான பல வழக்குகள் உள்ளவரின் அழைப்பின் பேரில், நாட்டின் நீதியமைச்சர் நாற்காலியின் மறுபக்கம் வந்து அமர்ந்திருப்பது எந்தளவுக்கு நியாயம் என நாட்டு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.அதேவேளை எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் நாங்கள் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement