• May 09 2024

பேரனின் தாக்குதலுக்கு இலக்காகிய வயோதிபப் பெண் உயிரிழப்பு..! தப்பியோடிய சந்தேகநபர் samugammedia

Chithra / Jun 29th 2023, 9:52 am
image

Advertisement

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு ஹெட்டிமுல்ல, கௌடுகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் 89 வயதுடையவர் எனவும், தனது வீட்டில் இருந்த போது அவரது பேரனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான பெண் படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் தாக்குதலை நடத்திய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரனின் தாக்குதலுக்கு இலக்காகிய வயோதிபப் பெண் உயிரிழப்பு. தப்பியோடிய சந்தேகநபர் samugammedia கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று இரவு ஹெட்டிமுல்ல, கௌடுகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த பெண் 89 வயதுடையவர் எனவும், தனது வீட்டில் இருந்த போது அவரது பேரனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.தாக்குதலுக்குள்ளான பெண் படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் தாக்குதலை நடத்திய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement