அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையின் நிமித்தம் அவரை அழைத்துச் செல்ல முற்பட்ட வேளை அவருக்கு உயர் ரத்த அழுத்தம், நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், அவருக்கு ஈசிஜி இயல்பாக இல்லை என்றும் அமைச்சரின் உடல்நிலை குறித்து பின்னரே தெரிவிக்கப்படும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை, இதயத்துடிப்பு, உடலில் ஆக்சிஜன் சமநிலை போன்றன தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தொடர்ந்தும் மயக்க நிலையிலேயே உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி, இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அவருக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்படின் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான சுழலில், அமைச்சர் சேகர் பாபு அவரை பார்ப்பதற்காக சென்ற வேளை, செந்தில் பாலாஜி என்று அழைத்தபோது எந்தவித சமிக்ஞையும் அவரிடம் இருந்து வரவில்லை என்றும் அவர் சுயநினைவின்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவசர சிகிச்சை பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஈசிஜி இயல்பாக இல்லை.மருத்துவமனை தகவல்.samugammedia அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையின் நிமித்தம் அவரை அழைத்துச் செல்ல முற்பட்ட வேளை அவருக்கு உயர் ரத்த அழுத்தம், நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில், அவருக்கு ஈசிஜி இயல்பாக இல்லை என்றும் அமைச்சரின் உடல்நிலை குறித்து பின்னரே தெரிவிக்கப்படும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை, இதயத்துடிப்பு, உடலில் ஆக்சிஜன் சமநிலை போன்றன தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தொடர்ந்தும் மயக்க நிலையிலேயே உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி, இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அவருக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்படின் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான சுழலில், அமைச்சர் சேகர் பாபு அவரை பார்ப்பதற்காக சென்ற வேளை, செந்தில் பாலாஜி என்று அழைத்தபோது எந்தவித சமிக்ஞையும் அவரிடம் இருந்து வரவில்லை என்றும் அவர் சுயநினைவின்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.