முல்லைத்தீவு மின்சார சபையினரின் எல்லைக்குட்பட்ட முல்லைத்தீவு திருகோணமலை பிரதான வீதியில் முல்லைத்தீவில் இருந்து கொக்கிளாய் வரையான கிராமங்களில் இப்போது மின் துண்டிப்புக்களை அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுதொகையில் மின்கட்டணம் உள்ள போதும் சிவப்பறிக்கை (Red Report- Red bill) வழங்கிவிட்டு மின்துண்டிப்பை மேற்கொள்வதனை அவதானிக்க முடிந்தது.
மின் கட்டணத்தை செலுத்திய பின்னர் மீள் இணைத்தலுக்காக ரூபா 3000 அறவிடுவதாக அறிவுறுத்தியுள்ள போதும்(சிவப்பறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது) விரைவாக மீள் மின்னிணைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை.
சிட்டை வழங்கப்பட்டு பத்து தினங்களுக்குள் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தும் விதிகளில் துண்டிக்கப்பட்டதும் மீளவும் இணைத்தலுக்கான ஒழுங்குகள் பற்றி எந்தக் குறிப்புக்களும் இல்லை என்பதும் இங்கே அவதானிக்க முடிந்தது.
இதனால் பொதுமக்கள் பணத்தை செலுத்திய பின்னரும் மின்சாரம் இல்லாது இருக்கின்றனர்.
துண்டிப்புக்களை அடுத்து மின் கட்டணத்தை செலுத்திய பின்னரும் பணம் செலுத்தியமையை அழைப்பு நிலையங்களூடாக தெரியப்படுத்திய போதும் மீள் மின் இணைப்புக்காக நீண்ட நேரங்களை செலவிட வேண்டியுள்ளதாக இந்த இடரை எதிர்கொண்ட மக்கள் பலர் விசனம் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மின்சார சபையினரின் ஒழுங்கற்ற செயல்: சிரமத்தில் மக்கள் samugammedia முல்லைத்தீவு மின்சார சபையினரின் எல்லைக்குட்பட்ட முல்லைத்தீவு திருகோணமலை பிரதான வீதியில் முல்லைத்தீவில் இருந்து கொக்கிளாய் வரையான கிராமங்களில் இப்போது மின் துண்டிப்புக்களை அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர்.சிறுதொகையில் மின்கட்டணம் உள்ள போதும் சிவப்பறிக்கை (Red Report- Red bill) வழங்கிவிட்டு மின்துண்டிப்பை மேற்கொள்வதனை அவதானிக்க முடிந்தது.மின் கட்டணத்தை செலுத்திய பின்னர் மீள் இணைத்தலுக்காக ரூபா 3000 அறவிடுவதாக அறிவுறுத்தியுள்ள போதும்(சிவப்பறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது) விரைவாக மீள் மின்னிணைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை.சிட்டை வழங்கப்பட்டு பத்து தினங்களுக்குள் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தும் விதிகளில் துண்டிக்கப்பட்டதும் மீளவும் இணைத்தலுக்கான ஒழுங்குகள் பற்றி எந்தக் குறிப்புக்களும் இல்லை என்பதும் இங்கே அவதானிக்க முடிந்தது.இதனால் பொதுமக்கள் பணத்தை செலுத்திய பின்னரும் மின்சாரம் இல்லாது இருக்கின்றனர்.துண்டிப்புக்களை அடுத்து மின் கட்டணத்தை செலுத்திய பின்னரும் பணம் செலுத்தியமையை அழைப்பு நிலையங்களூடாக தெரியப்படுத்திய போதும் மீள் மின் இணைப்புக்காக நீண்ட நேரங்களை செலவிட வேண்டியுள்ளதாக இந்த இடரை எதிர்கொண்ட மக்கள் பலர் விசனம் தெரிவிக்கின்றனர்.