• May 21 2024

பிரிந்து போன காதலி; மீண்டும் சேர 21 மணிநேரம் மண்டியிட்டு கெஞ்சிய காதலன்.. அடுத்து நடந்தது என்ன? samugammedia

Chithra / Apr 5th 2023, 3:16 pm
image

Advertisement

பிரிந்த காதலி தன்னிடம் மீண்டும் சேர வேண்டி காதலர் 21 மணி நேரம் மண்டியிட்டுள்ள சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சீனா, டஜாவ் நகரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு பிரேக் அப் ஆகியுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த இளைஞர் காதலியை சமாதானம் செய்ய முடிவெடுத்து நிறுவனத்திற்கு பூச்செண்டுடன் சென்று, அலுவலகத்தின் முன் தொடர்ந்து வாசலில் மண்டியிட்டபடி காத்திருந்தார்.

ஆனால் அவரது காதலி இறங்கி வரவே இல்லை. இந்நிலையில், 21 மணிநேரம் அங்கேயே மண்டியிட்டபடி காத்திருந்தும் காதலி வரவில்லை.

அக்கம்பக்கத்தில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் ஒன்று திரண்டு, அடையாளம் தெரியாத அந்த நபரை அணுகி உள்ளனர். இந்த முயற்சியை கைவிடும்படி அறிவுரை கூறி உள்ளனர்.

ஆனால், விடாப்படியாக அந்த நபர், சில நாட்களுக்கு முன் தனது காதலி பிரிந்து சென்று விட்டார். நான் மன்னிப்பு கோருகிறேன். அவர் திரும்பி வரவேண்டும் என கூறியுள்ளார்.


இந்த தகவல் அறிந்து காவல் அதிகாரிகள் கூட வந்து அந்நபரை சமரசப்படுத்த முயன்று தோல்வி அடைந்தனர். தொடர்ந்து அதீத அன்பில் சிக்குண்ட நிலையில் இருந்த அவரிடம் இருந்து, அந்த காதலி விலகி இருக்கும்படியும், அதுவே காதலிக்கு நல்லது என்ற வகையில், சமூக ஊடக பயனாளர்கள் அந்த பெண்ணுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். கெஞ்சி கேட்பதில் எல்லாம் காதல் வந்து விடாது என்றும் கூறியுள்ளனர்.

21 மணிநேரம் காதலிக்காக ஒரே இடத்தில் மண்டியிட்டு, கெஞ்சி கொண்டிருந்த அந்த நபர், இதனை அறிந்து பேரதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்.

இதனால் ஏமாற்றமடைந்த இளைஞர் மிகவும் சோர்வடைந்து வேறு வழியின்றி தனது முயற்சியை கைவிட்டார்.

இதுதொடர்பான போட்டோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


பிரிந்து போன காதலி; மீண்டும் சேர 21 மணிநேரம் மண்டியிட்டு கெஞ்சிய காதலன். அடுத்து நடந்தது என்ன samugammedia பிரிந்த காதலி தன்னிடம் மீண்டும் சேர வேண்டி காதலர் 21 மணி நேரம் மண்டியிட்டுள்ள சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.சீனா, டஜாவ் நகரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு பிரேக் அப் ஆகியுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த இளைஞர் காதலியை சமாதானம் செய்ய முடிவெடுத்து நிறுவனத்திற்கு பூச்செண்டுடன் சென்று, அலுவலகத்தின் முன் தொடர்ந்து வாசலில் மண்டியிட்டபடி காத்திருந்தார்.ஆனால் அவரது காதலி இறங்கி வரவே இல்லை. இந்நிலையில், 21 மணிநேரம் அங்கேயே மண்டியிட்டபடி காத்திருந்தும் காதலி வரவில்லை.அக்கம்பக்கத்தில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் ஒன்று திரண்டு, அடையாளம் தெரியாத அந்த நபரை அணுகி உள்ளனர். இந்த முயற்சியை கைவிடும்படி அறிவுரை கூறி உள்ளனர்.ஆனால், விடாப்படியாக அந்த நபர், சில நாட்களுக்கு முன் தனது காதலி பிரிந்து சென்று விட்டார். நான் மன்னிப்பு கோருகிறேன். அவர் திரும்பி வரவேண்டும் என கூறியுள்ளார்.இந்த தகவல் அறிந்து காவல் அதிகாரிகள் கூட வந்து அந்நபரை சமரசப்படுத்த முயன்று தோல்வி அடைந்தனர். தொடர்ந்து அதீத அன்பில் சிக்குண்ட நிலையில் இருந்த அவரிடம் இருந்து, அந்த காதலி விலகி இருக்கும்படியும், அதுவே காதலிக்கு நல்லது என்ற வகையில், சமூக ஊடக பயனாளர்கள் அந்த பெண்ணுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். கெஞ்சி கேட்பதில் எல்லாம் காதல் வந்து விடாது என்றும் கூறியுள்ளனர்.21 மணிநேரம் காதலிக்காக ஒரே இடத்தில் மண்டியிட்டு, கெஞ்சி கொண்டிருந்த அந்த நபர், இதனை அறிந்து பேரதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்.இதனால் ஏமாற்றமடைந்த இளைஞர் மிகவும் சோர்வடைந்து வேறு வழியின்றி தனது முயற்சியை கைவிட்டார்.இதுதொடர்பான போட்டோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement

Advertisement