இலங்கையிலுள்ள சிங்களவர்களையும் தமிழர்களையும் தூண்டிவிட்டு மீண்டும் இன ரீதியான பிரச்சினையை தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தின குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் தற்போது அதிகரித்து வரும் இன மற்றும் மத முரண்பாடுகளால் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பௌத்தர்களையும் இந்துக்களையும் முட்டிமோதவிட்டு மதரீதியிலான பிரச்சினையை மென்மேலும் தீவிரப்படுத்த சதி நடைபெறுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தின மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் இந்த நாட்டின் நல்லிணக்கத்துக்கு பெரிதும் பாதிப்பே ஏற்படுத்தி வருகின்றது.
இந்த இரண்டு பிரச்சினைகளும் ஒரே மேசையில் பேசித் தீர்த்தால் தான் அந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டலாம்.
இல்லையேல் இந்தப் பிரச்சினைகள் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தின எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன, மத பிரச்சினைகளை ஒரே மேசையில் பேசித் தீர்க்க வேண்டும் - ராஜித வலியுறுத்து samugammedia இலங்கையிலுள்ள சிங்களவர்களையும் தமிழர்களையும் தூண்டிவிட்டு மீண்டும் இன ரீதியான பிரச்சினையை தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தின குறிப்பிட்டுள்ளார்.வடக்கு கிழக்கில் தற்போது அதிகரித்து வரும் இன மற்றும் மத முரண்பாடுகளால் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக பௌத்தர்களையும் இந்துக்களையும் முட்டிமோதவிட்டு மதரீதியிலான பிரச்சினையை மென்மேலும் தீவிரப்படுத்த சதி நடைபெறுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தின மேலும் தெரிவித்துள்ளார்.இவ்வாறான நடவடிக்கைகள் இந்த நாட்டின் நல்லிணக்கத்துக்கு பெரிதும் பாதிப்பே ஏற்படுத்தி வருகின்றது.இந்த இரண்டு பிரச்சினைகளும் ஒரே மேசையில் பேசித் தீர்த்தால் தான் அந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டலாம். இல்லையேல் இந்தப் பிரச்சினைகள் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தின எச்சரிக்கை விடுத்துள்ளார்.