பிரித்தானியாவின் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.
ஜனாதிபதி கடந்த 4 ஆம் திகதி பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் அங்கு பல முக்கிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிலும் கலந்துகொண்டார்.