வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு, தன்னிறைவு பெற்ற பொருளாதார அமைப்பைக் கொண்ட நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று விடுத்துள்ள ஊடக அறிவித்தல் ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது தேர்தல் ஆண்டாகும் எனவும், மக்கள் எதிர்பார்க்கும் அரசாங்கம் நாட்டில் அமையும் என்பது தமது நம்பிக்கை எனவும் தெரிவித்துள்ள அவர், வளமான யுகத்தை உருவாக்குவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.