• Sep 20 2024

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை!

Chithra / Aug 27th 2024, 11:45 am
image

Advertisement

 

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனையும் 10 வருட காலத்திற்கு பணி இடைநிறுத்தமும் செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதில் ஏ.எச்.எம் ஃபௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் 4 இலட்சம் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2010 இல், ஏ.எச்.எம் ஃபௌசி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது, ​​நெதர்லாந்திலிருந்து சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியதாகவும்,

நிதியமைச்சு வாகனத்தின் பராமரிப்புக்காக சுமார் 10 இலட்சம் ரூபா பணம் செலவழித்தமை போன்ற 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் ஒதுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் இந்த தீர்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை  முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனையும் 10 வருட காலத்திற்கு பணி இடைநிறுத்தமும் செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.இதில் ஏ.எச்.எம் ஃபௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் 4 இலட்சம் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.2010 இல், ஏ.எச்.எம் ஃபௌசி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது, ​​நெதர்லாந்திலிருந்து சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியதாகவும்,நிதியமைச்சு வாகனத்தின் பராமரிப்புக்காக சுமார் 10 இலட்சம் ரூபா பணம் செலவழித்தமை போன்ற 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் ஒதுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் இந்த தீர்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement