பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசு இரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் இரண்டு வாரங்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அட்டோக் நகரில் உள்ள சிறை வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை (30) விசாரணை நடத்திய பின்னர் இந்த உத்தரவினை பிறப்பித்தது.
அதன்படி, இம்ரான் கான் செப்டம்பர் 13 வரை சிறைக் காவலில் வைக்கப்படுவார்.
உழல் குற்றச்சாட்டுக்காக இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் நேற்று தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இந் நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.