அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கீர்த்தி ரணசிங்க நேற்று (10) காலை முதல் சுரங்க மற்றும் புவிசரிதவியல் பணியகத்தின் அம்பாறை அலுவலக கூரையில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்.
குறித்த அலுவலகத்தின் தற்போதைய பிரதானியை நீக்குமாறு கோரி அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
மணல் அகழ்வு உரிமம் உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும் அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்து முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.
அவரது ஆதரவுடன் சுமார் 50 மணல் உரிமதாரர்கள் அடங்கிய குழுவும் இந்த அலுவலகத்தின் முன் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.