வவுனியாவில் பிரபல மருத்துவர் ஒருவரின் மகன் தவறான முடிவெடுத்து மரணமடைந்தார்.
குறித்த இளைஞர் நேற்றையதினம் மாலை நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.
சம்பவத்தில் செந்தில்காந்தன் லக்சிகன் என்ற 26 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
2016ம் ஆண்டு உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3ஏ எடுத்து மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்று மருத்துவபீடத்துக்கு தெரிவாகியிருந்தார்.
வவுனியாவில் தொடர்ச்சியாக தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.