• May 18 2024

மர்ம நபர்களால் தாக்குதலிற்கு இலக்கான பிரபல இந்துக் கோவில்!samugammedia

Sharmi / May 6th 2023, 10:13 am
image

Advertisement

இங்கையில் மட்டுமன்றி  வெளிநாடுகளிலும் இந்து ஆலயங்கள் தொடர்ந்து சிதைக்கப்பட்டும் அவற்றின் மேல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நேற்றைய தினம் சிட்னி நகரில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவிலின் சுவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

அங்கு வாழும் இந்துக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் இந்த சம்பவம் தொடர்பாக நிர்வாகம் சார்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

அதையடுத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்  அந்த கோவிலில் காலிஸ்தான் கொடி பறந்ததை அவதானித்துள்ளனர்.

இதனால், கோவிலை தாக்கியது காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதையடுத்து, கோவிலை தாக்கிய அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அதிபர் அந்தோணி அல்பனீஸ் இந்தியா சென்றிருந்த வேலை கோவில்கள் மீதான தாக்குதல்களை ஆஸ்திரேலியா பொறுத்துக் கொள்ளாது என்று உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


மர்ம நபர்களால் தாக்குதலிற்கு இலக்கான பிரபல இந்துக் கோவில்samugammedia இங்கையில் மட்டுமன்றி  வெளிநாடுகளிலும் இந்து ஆலயங்கள் தொடர்ந்து சிதைக்கப்பட்டும் அவற்றின் மேல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்றைய தினம் சிட்னி நகரில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவிலின் சுவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அங்கு வாழும் இந்துக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் இந்த சம்பவம் தொடர்பாக நிர்வாகம் சார்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளனர். அதையடுத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்  அந்த கோவிலில் காலிஸ்தான் கொடி பறந்ததை அவதானித்துள்ளனர். இதனால், கோவிலை தாக்கியது காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதையடுத்து, கோவிலை தாக்கிய அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அதிபர் அந்தோணி அல்பனீஸ் இந்தியா சென்றிருந்த வேலை கோவில்கள் மீதான தாக்குதல்களை ஆஸ்திரேலியா பொறுத்துக் கொள்ளாது என்று உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement