பிரபஞ்ச அழகி இறுதி போட்டிக்கு தேர்வான பிரபல மாடல் அழகி திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தாருடன் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 23 வயதுடைய சியன்னா வெயிர் பிரபல மாடல் அழகியாக வலம் வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் 2022 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
சியன்னா வெயிர்றிற்கு குதிரை போட்டியின் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தமையால் 3 வயதில் இருந்தே அடிக்கடி குதிரை சவாரியில் ஈடுபட்டும் வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி ஆஸ்திரேலியாவில் உள்ள வின்ட்சார் போலோ கிரவுண்டில் குதிரை சாரியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது, திடீரென குதிரை சரிந்து விழுந்தமையால் சியன்னா நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து பல வாரங்களாக உயிர் காக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்ட போதும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் தோன்றவில்லை.
இதனால் துக்கத்தில் இருந்த குடும்பத்தினர் உயிர் காக்கும் கருவியை எடுத்து விடுமாறு மருத்துவர்களிடம் கூறியுள்ள நிலையில் சியன்னா வெயிர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்.
பிரபஞ்ச அழகி இறுதிப் போட்டிக்கு தெரிவான பிரபல மாடல் அழகி.திடீர் மரணம்.samugammedia பிரபஞ்ச அழகி இறுதி போட்டிக்கு தேர்வான பிரபல மாடல் அழகி திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தாருடன் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 23 வயதுடைய சியன்னா வெயிர் பிரபல மாடல் அழகியாக வலம் வந்துள்ளார். இந்நிலையில், இவர் 2022 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். சியன்னா வெயிர்றிற்கு குதிரை போட்டியின் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தமையால் 3 வயதில் இருந்தே அடிக்கடி குதிரை சவாரியில் ஈடுபட்டும் வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி ஆஸ்திரேலியாவில் உள்ள வின்ட்சார் போலோ கிரவுண்டில் குதிரை சாரியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது, திடீரென குதிரை சரிந்து விழுந்தமையால் சியன்னா நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து பல வாரங்களாக உயிர் காக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்ட போதும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் தோன்றவில்லை. இதனால் துக்கத்தில் இருந்த குடும்பத்தினர் உயிர் காக்கும் கருவியை எடுத்து விடுமாறு மருத்துவர்களிடம் கூறியுள்ள நிலையில் சியன்னா வெயிர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்.