ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது இன முரண்பாட்டிற்கு வழிவகுக்கும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார். இதன்போது இவர் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்தினால் அவர் வெற்றி பெறுவாரா? இல்லையா? என்பது ஒரு புறமிருக்க நாட்டு மக்களிடையே இன முரண்பாடு ஏற்படும்.
எனவே ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஆதரவளிக்க வேண்டும்.அதே நேரத்தில் சிறுபான்மை மக்களும் வாக்குகளை சிதறடிக்காமல் தமக்கு பிடித்தமான ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டுமெனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.