வடக்கு கடற்ப்பரப்பில் நீர்வேளாண்மை மேற்கொள்வது தொடர்பில் உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியட்டுள்ளது. இதில் கடலட்டைப் பண்ணைகளை உருவாக்குதல் அட்டை வளர்ப்பு அதன் சாதகத் தன்மைகள் பற்றி மாத்திரமே குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கை தயாரிப்பின் போது கடற்றொழிலாளர்களுடனோ அல்லது அது சார்ந்த பிரதிநிதிகளுடனோ கலந்துரையாடாமல், பண்ணையால் வரப்போகும் பாதகம் பற்றி குறிப்பிடாமல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடல் வளம் பற்றி பொருளியல் நிபுனரும் சமூக செயற்பாட்டாளருமான ம.செல்வின் தலைமையிலான கலந்துரையாடலுக்கு கடற்றொழிலாளர்கள் இன்று அழைப்பு விடுத்திருந்தனர்.
இதன் போது 17 சங்கங்கள் கலந்து கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டு ஊடக சந்திப்பினையும் நடாத்தியிருந்தனர்.
புங்குடுதீவு சங்கத்தைச் சேர்ந்த ரவி கருத்துத் தெரிவிக்கும் போது அட்டைப் பண்ணைகள் வேண்டாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தான் தெரிவித்த போது ஏற்பட்ட வாக்குவாத்த்தில் அமைச்சர் கதிரையை தூக்கி அடிக்க வந்து அச்சுறுத்தல் விடுத்தத்தாகவும் இன்று தெரிவித்தார்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள், பாசையூர் கடற்றொழிலாளர்கள் சங்கத்தில் இன்று ஒன்று கூடல் samugammedia வடக்கு கடற்ப்பரப்பில் நீர்வேளாண்மை மேற்கொள்வது தொடர்பில் உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியட்டுள்ளது. இதில் கடலட்டைப் பண்ணைகளை உருவாக்குதல் அட்டை வளர்ப்பு அதன் சாதகத் தன்மைகள் பற்றி மாத்திரமே குறிப்பிட்டுள்ளது.இந்த அறிக்கை தயாரிப்பின் போது கடற்றொழிலாளர்களுடனோ அல்லது அது சார்ந்த பிரதிநிதிகளுடனோ கலந்துரையாடாமல், பண்ணையால் வரப்போகும் பாதகம் பற்றி குறிப்பிடாமல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.கடல் வளம் பற்றி பொருளியல் நிபுனரும் சமூக செயற்பாட்டாளருமான ம.செல்வின் தலைமையிலான கலந்துரையாடலுக்கு கடற்றொழிலாளர்கள் இன்று அழைப்பு விடுத்திருந்தனர்.இதன் போது 17 சங்கங்கள் கலந்து கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டு ஊடக சந்திப்பினையும் நடாத்தியிருந்தனர்.புங்குடுதீவு சங்கத்தைச் சேர்ந்த ரவி கருத்துத் தெரிவிக்கும் போது அட்டைப் பண்ணைகள் வேண்டாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தான் தெரிவித்த போது ஏற்பட்ட வாக்குவாத்த்தில் அமைச்சர் கதிரையை தூக்கி அடிக்க வந்து அச்சுறுத்தல் விடுத்தத்தாகவும் இன்று தெரிவித்தார்.