• May 17 2024

யாழிற்கு வருகை தரவுள்ள முக்கிய நாட்டின் மீனவர்கள்!

Sharmi / Jan 24th 2023, 10:16 am
image

Advertisement

தமிழகம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு எதிர்வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். 

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டு படகு தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன. 

இவ்வாறு வழக்கு விசாரணைகள் இடம்பெறும் படகுகளின் உரிமையாளர்களும் இராமேஸ்வரம் விசைப்படகு சங்கத்தைச் சேர்ந்தவர்களுமே யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். 

யாழ்ப்பாணம் வருகை தரும் சுமார் 10 பேர் அடங்கிய மீனவப் பி்ரதிநிதிகள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


யாழிற்கு வருகை தரவுள்ள முக்கிய நாட்டின் மீனவர்கள் தமிழகம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு எதிர்வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டு படகு தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு வழக்கு விசாரணைகள் இடம்பெறும் படகுகளின் உரிமையாளர்களும் இராமேஸ்வரம் விசைப்படகு சங்கத்தைச் சேர்ந்தவர்களுமே யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். யாழ்ப்பாணம் வருகை தரும் சுமார் 10 பேர் அடங்கிய மீனவப் பி்ரதிநிதிகள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement