நுவரெலியா மாநாகர சபையின் ஏற்பாட்டில் நுவரெலியா – விக்டோரியா பூங்காவில் இன்றைய தினம் மலர் கண்காட்சி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மலர் கண்காட்சியானது நுவரெலியா நகரில் வசந்த காலத்தை முன்னிட்டு வருடம் தோறும் விக்டோரியா பூங்காவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் விதவிதமான மலர்களைக் கொண்டு பல்வேறு உருவங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்த மலர் கண்காட்சியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு நாளை மாலை பணப்பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.