வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி நாட்டு மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா. தொடருக்கு சென்றிருந்த இலங்கை குழாமில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியின் மகனும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். தனக்கு வேலை அதிகம், அதனால்தான் தன்னார்வ அடிப்படையில் மகனை இணைத்துக் கொண்டார் என்பது உட்பட பல கதைகளை தற்போது அலிசப்ரி கூறிவருகின்றார்.
இவ்வாறு கருத்துகளை வெளியிடுவதைவிட தவறை ஏற்றுக் கொண்டு அவர் மன்னிப்பு கோரவேண்டும். தனக்கு வேலைப்பழு அதிகம் என்றால் அமைச்சுப் பதவியை துறந்து அதனை பொருத்தமான ஒருவரிடம் கையளிக்கவேண்டும்.
ராஜபக்ஷக்களுக்கு எதிரான வழக்குகளில் ஆஜரானதால்தான் அலிசப்ரிக்கு தேசிய பட்டியல் எம்.பி. பதவி வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி பதவி விலக வேண்டும்.மேர்வின் சில்வா வலியுறுத்து. samugammedia வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி நாட்டு மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஐ.நா. தொடருக்கு சென்றிருந்த இலங்கை குழாமில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியின் மகனும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். தனக்கு வேலை அதிகம், அதனால்தான் தன்னார்வ அடிப்படையில் மகனை இணைத்துக் கொண்டார் என்பது உட்பட பல கதைகளை தற்போது அலிசப்ரி கூறிவருகின்றார். இவ்வாறு கருத்துகளை வெளியிடுவதைவிட தவறை ஏற்றுக் கொண்டு அவர் மன்னிப்பு கோரவேண்டும். தனக்கு வேலைப்பழு அதிகம் என்றால் அமைச்சுப் பதவியை துறந்து அதனை பொருத்தமான ஒருவரிடம் கையளிக்கவேண்டும்.ராஜபக்ஷக்களுக்கு எதிரான வழக்குகளில் ஆஜரானதால்தான் அலிசப்ரிக்கு தேசிய பட்டியல் எம்.பி. பதவி வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.