• Feb 07 2025

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு நடந்த துயரம்

Chithra / Feb 7th 2025, 4:40 pm
image

 

இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணியொருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெந்தொட்ட பகுதியில் கடலுக்கு நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, அப் பிரதேச மக்கள் குறித்த அவரது சடலத்தை மீட்டு  பலபிட்டிய மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவத்தில் 63 வயதுடைய கசகஸ்தான் நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணியின் சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு,  சம்பவம் தொடர்பில் பெந்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு நடந்த துயரம்  இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணியொருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பெந்தொட்ட பகுதியில் கடலுக்கு நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து, அப் பிரதேச மக்கள் குறித்த அவரது சடலத்தை மீட்டு  பலபிட்டிய மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.இச் சம்பவத்தில் 63 வயதுடைய கசகஸ்தான் நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணியின் சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு,  சம்பவம் தொடர்பில் பெந்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement