• Feb 05 2025

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - தேர்தல்கள் ஆணைக்குழு

Chithra / Feb 4th 2025, 8:50 am
image


  

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேர்தல் வாக்கெடுப்பு தினத்தன்று அரச சேவையாளர்கள், ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் உட்பட சுகாதார சேவையாளர்கள் என அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பலர் வாக்களிக்காமல் தமது சேவைகளில் ஈடுபடுகிறார்கள்.

வாக்களிப்பு தினத்தன்று அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறையின் சேவையாளர்களுக்கு தபால்மூல வாக்களிப்புக்கு அனுமதியளிக்குமாறு தேர்தல் முறைமை தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் குழுக்களிடம் பலமுறை யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

இருப்பினும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் ஏதும் இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இந்த யோசனைகளை முன்வைத்தோம். 

ஆகவே இந்த யோசனைகளை நிறைவேற்றுவதற்கு தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அதற்கான அழுத்தத்தை தொடர்ந்து பிரயோகிப்போம். என்றார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - தேர்தல்கள் ஆணைக்குழு   உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,தேர்தல் வாக்கெடுப்பு தினத்தன்று அரச சேவையாளர்கள், ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் உட்பட சுகாதார சேவையாளர்கள் என அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பலர் வாக்களிக்காமல் தமது சேவைகளில் ஈடுபடுகிறார்கள்.வாக்களிப்பு தினத்தன்று அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறையின் சேவையாளர்களுக்கு தபால்மூல வாக்களிப்புக்கு அனுமதியளிக்குமாறு தேர்தல் முறைமை தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் குழுக்களிடம் பலமுறை யோசனைகளை முன்வைத்துள்ளோம்.இருப்பினும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் ஏதும் இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை.2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இந்த யோசனைகளை முன்வைத்தோம். ஆகவே இந்த யோசனைகளை நிறைவேற்றுவதற்கு தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அதற்கான அழுத்தத்தை தொடர்ந்து பிரயோகிப்போம். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement