• Sep 23 2024

சிறுவர்களின் மாயனமாகும் காசா - அண்டனியோ குட்டரஸ் எச்சரிக்கை...!samugammedia

Anaath / Nov 7th 2023, 11:14 am
image

Advertisement

காசா சிறுவர்களின் மயானமாக மாறிவருவதாக, ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரஸே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது மனிதாபிமான நெருக்கடியை காட்டிலும், மனித குலத்தின் நெருக்கடியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் கொல்லப்படுகின்றனர்.

எனவே, உடனடியாக போர் நிறுத்தத்தை அமுல்ப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இணங்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

காசா போர் ஆரம்பித்து ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலில் இதுவரையில், 10 ஆயிரத்து 22 பேர் கொல்லப்பட்டுள்லத்துடன் அவர்களில் 4 ஆயிரத்து 104 சிறுவர்களும் அடங்குவதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





சிறுவர்களின் மாயனமாகும் காசா - அண்டனியோ குட்டரஸ் எச்சரிக்கை.samugammedia காசா சிறுவர்களின் மயானமாக மாறிவருவதாக, ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரஸே இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது மனிதாபிமான நெருக்கடியை காட்டிலும், மனித குலத்தின் நெருக்கடியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் கொல்லப்படுகின்றனர்.எனவே, உடனடியாக போர் நிறுத்தத்தை அமுல்ப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இணங்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.காசா போர் ஆரம்பித்து ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலில் இதுவரையில், 10 ஆயிரத்து 22 பேர் கொல்லப்பட்டுள்லத்துடன் அவர்களில் 4 ஆயிரத்து 104 சிறுவர்களும் அடங்குவதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement