• Sep 23 2024

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சமாதானம் மற்றும் நீதிக்கான புதிய நெறிமுறைகளுக்கான உலகளாவிய இயக்கம் ஆரம்பம்...!samugammedia

Sharmi / Oct 26th 2023, 10:06 am
image

Advertisement

சமாதானம் மற்றும் நீதிக்கான புதிய நெறிமுறைகள் மற்றும் பொறிமுறைகளுக்கான உலகளாவிய  இயக்கமொன்றை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

அண்மைய காலங்களில் உலகின் வெவ்வேறான பகுதிகளில்அதிகரித்து வரும் வன்முறை முரண்பாடுகளின் அதிகரிப்புக்கு மத்தியில் நீதியுடன் சமாதானத்துக்கான உலகளாவிய இயக்கமொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.

முழு உலகிற்கும் கற்பனை செய்து பார்க்க முடியாத பின்விளைவுகளுடன் இஸ்ரேலிய-பலஸ்தீன முரண்பாடானது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பரவும் ஆபத்துக்காரணமாக சமாதானத்துக்கும் நீதிக்குமான இவ்வாறானஉலகளாவிய முயற்சி மிகவும் அவசியமாக இன்று தேவைப்படுகிறது.

தனித்து வன்முறைக்குப் பதிலாக சட்டம்/ பேச்சுவார்த்தை/ இராஜதந்திரம் மூலம் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான புதியதொரு பொறிமுறை மற்றும் புதிய நெறிமுறைகளுக்கு உலகளாவிய ரீதியிலானதொரு இயக்கமே காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

பொறுப்புக்கூறலுக்கான உலகளாவியரீதியில் இருக்கின்றஒரேயொரு சர்வதேச குற்றப் பொறிமுறையான சர்வதேசகுற்றவியல் நீதிமன்றம் கூட இரட்டை நிலைப்பாடுகளைக்கொண்டுள்ளது போலுள்ளது. உதாரணமாக, மியான்மாரின்றோகிஞ்சாக்களின் (Rohingyas) நாடுகடத்தல் தொடர்பாக தனதுநியாயாதிக்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்பயன்படுத்தியது. ஆனால், சீனாவின் உய்குர்களின் (Uyghurs) நாடுகடத்தல் தொடர்பாக தனது நியாயாதிக்கத்தை பயன்படுத்தமறுத்தது. உக்ரேனில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்ஏற்கெனவே பங்கெடுத்துள்ளது.

பாலஸ்தீனம், றோம்சாசனத்தில் 2015ஆம் ஆண்டு கையெழுத்திட்டதுடன், காஸா, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசசேலகம் ஆகியன பலஸ்தீனப்பிராந்தியத்தின் பகுதி என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் அரச வழக்குத் தொடருநருக்கு 2021ஆம் ஆண்டுஉறுதிப்படுத்தியபோதும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கெதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுநர் இன்று வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிறுவரை இலக்கு வைப்பது, எரிப்பது மற்றும் பொதுமக்களை கடத்துதல் உள்ளடங்கலான மனித குலத்துக்கு எதிரான ஹமாஸின் நடவடிக்கைகளானவை மானிடத்திற்கு எதிரான(Crimes Against Humanity) மோசமான மீறல் மாத்திரமன்றி மானிடத்திற்கு எதிரான சர்வதேச குற்றமொன்றாகும்.

இது தவிர சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதலாவது அரச வழக்குத் தொடருநர் லூயிஸ் மொரெனோ ஒகம்போவின் (Luis Moreno Ocampo) அவதானித்தபடி, இஸ்ரேலின் காஸா முற்றுகையானது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ குழுவொன்றின் பெளதிக அழிவுக்கான நிலைமைகளை வழிவகுப்பானது இன அழிப்பிற்கு எதிராக சர்வதேச உடன்படிக்கையின் 2(C) சரத்தின் கீழ் இனவழிப்பாக (Genocide) ஆக அமையக்கூடும்.

நிகழ்வு பூர்வமான ஆர்ட்சக் (defacto state of Artsakh) (நாகொர்னோ-கரபாஹ்) அரசின் அழிவு மற்றும் 24 மணித்தியாலங்களில் 100,000க்கும் அதிகமான ஆர்மேனியர்களின் இடப்பெயர்வின்போது ஐக்கிய நாடுகள் சபையினதும் மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையினதும் இயலாமையை நாங்கள் அண்மையில் கண்டிருந்தோம்.

ஈழத் தமிழர்களாகிய நாமும், இவ்வாறானதொரு நிலையை எதிர்கொண்டிருந்தோம். 2009ஆம் ஆண்டில் எமது நிகழ்வு பூர்வமான தமிழீழ நாடானது (defacto state of Tamil Eelam) சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி அழிக்கப்பட்டிருந்ததுடன், இதன் காரணமாக 100,000க்கும் அதிகமான தமிழர் கொல்லப்பட்டிருந்தனர். இதை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் எதுவும் செய்திருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மீளாய்வு அறிக்கையின் (UN Internal Review Report - Petrie Report) அடிப்படையில், படுகொலை மற்றும் இதன் பேரழிவுப் பின்விளைவுகளை ஐக்கிய நாடுகள் சபை அறிந்திருந்தபோதும் அது தலையிடுவதில்லை எனத் தீர்மானித்திருந்தது.

இது தவிர, தமிழர்களுக்கெதிரான அந்த அட்டூழியக் குற்றங்கள் புரியப்பட்டு 14 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளபோதும் தற்போது வரையில் எவரும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை. இந்த சர்வதேச நீதியமைப்பின் தோல்வியால், பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறும் வகையில் பாதிக்கப்பட்டவர்களாலான சர்வதேச நீதிப் (Victims Driven Justice) பரப்புரையொன்றை 2019 ஆம் ஆண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.

தமிழ் இனவழிப்புப் போல இஸ்ரேலிய காஸா முரண்பாட்டின்போது தற்போதைய அட்டூழியங்கள் மற்றும் போர்க் குற்றங்களானவை ஒரு சில தனிநபர்களால் புரியப்பட்டவையல்ல. இது அரசொன்றால் புரியப்பட்டது.

எவ்வாறாயினும், அரசை பொறுப்புக்கூறலுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறுபட்ட உள்ளூர் சட்டவாட்சி முறைமைகளில் (domestic prosecution), இறையாண்மை விலக்கு (Sovereign Immunity) எனப்படுகின்ற கோட்பாடு தடையாகவுள்ளது. இதனை நீக்குவதற்காக, பாதிக்கப்பட்டவர்களாலான நீதிப் பொறிமுறையுடன் (Victims Driven International Justice), உள்ளூர் நீதிமன்றங்களில் அடூழியங்கள் புரிந்த அரசுகளுக்கு எதிராக நீதி கோரும் முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் இறையாண்மை விலக்கு Sovereion  Tmmunity) சட்டக் கோட்பாட்டை சட்டங்களில் இருந்து நீக்கும் பரப்புரையொன்றையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.

மேலுள்ளவை அனைத்தும் சர்வதேச அமைதி மற்றும் நீதிக்கான புதிய பொறிமுறைகள் மற்றும் புதிய நெறிமுறைகளுக்கான அத்தியாவசியத்தையும் அவசரத்தையும் வலியுறுத்துகின்றன. இன்னொரு அண்மைய கருத்தொன்றில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரான லூயிஸ் மொரெனோ ஒகம்போ (Luis Moreno Ocampo), "நாங்கள் தொடர்ந்தும் காலத்துக்கேற்றவாறு வளருவதுடன், முரண்பாடுகளுக்கு தீர்வுகள் காண்பதற்கு வேறு முறைமைகளை உருவாக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தவகையில், அமைதி மற்றும் நீதிக்கான புதிய பொறிமுறைகள் மற்றும் புதிய நெறிமுறைகளுக்கான பூகோள பரப்புரையொன்று தேவைப்படுகிறது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சமாதானம் மற்றும் நீதிக்கான புதிய நெறிமுறைகளுக்கான உலகளாவிய இயக்கம் ஆரம்பம்.samugammedia சமாதானம் மற்றும் நீதிக்கான புதிய நெறிமுறைகள் மற்றும் பொறிமுறைகளுக்கான உலகளாவிய  இயக்கமொன்றை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,அண்மைய காலங்களில் உலகின் வெவ்வேறான பகுதிகளில்அதிகரித்து வரும் வன்முறை முரண்பாடுகளின் அதிகரிப்புக்கு மத்தியில் நீதியுடன் சமாதானத்துக்கான உலகளாவிய இயக்கமொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.முழு உலகிற்கும் கற்பனை செய்து பார்க்க முடியாத பின்விளைவுகளுடன் இஸ்ரேலிய-பலஸ்தீன முரண்பாடானது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பரவும் ஆபத்துக்காரணமாக சமாதானத்துக்கும் நீதிக்குமான இவ்வாறானஉலகளாவிய முயற்சி மிகவும் அவசியமாக இன்று தேவைப்படுகிறது.தனித்து வன்முறைக்குப் பதிலாக சட்டம்/ பேச்சுவார்த்தை/ இராஜதந்திரம் மூலம் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான புதியதொரு பொறிமுறை மற்றும் புதிய நெறிமுறைகளுக்கு உலகளாவிய ரீதியிலானதொரு இயக்கமே காலத்தின் கட்டாயமாகவுள்ளது.பொறுப்புக்கூறலுக்கான உலகளாவியரீதியில் இருக்கின்றஒரேயொரு சர்வதேச குற்றப் பொறிமுறையான சர்வதேசகுற்றவியல் நீதிமன்றம் கூட இரட்டை நிலைப்பாடுகளைக்கொண்டுள்ளது போலுள்ளது. உதாரணமாக, மியான்மாரின்றோகிஞ்சாக்களின் (Rohingyas) நாடுகடத்தல் தொடர்பாக தனதுநியாயாதிக்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்பயன்படுத்தியது. ஆனால், சீனாவின் உய்குர்களின் (Uyghurs) நாடுகடத்தல் தொடர்பாக தனது நியாயாதிக்கத்தை பயன்படுத்தமறுத்தது. உக்ரேனில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்ஏற்கெனவே பங்கெடுத்துள்ளது. பாலஸ்தீனம், றோம்சாசனத்தில் 2015ஆம் ஆண்டு கையெழுத்திட்டதுடன், காஸா, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசசேலகம் ஆகியன பலஸ்தீனப்பிராந்தியத்தின் பகுதி என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் அரச வழக்குத் தொடருநருக்கு 2021ஆம் ஆண்டுஉறுதிப்படுத்தியபோதும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கெதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுநர் இன்று வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.சிறுவரை இலக்கு வைப்பது, எரிப்பது மற்றும் பொதுமக்களை கடத்துதல் உள்ளடங்கலான மனித குலத்துக்கு எதிரான ஹமாஸின் நடவடிக்கைகளானவை மானிடத்திற்கு எதிரான(Crimes Against Humanity) மோசமான மீறல் மாத்திரமன்றி மானிடத்திற்கு எதிரான சர்வதேச குற்றமொன்றாகும். இது தவிர சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதலாவது அரச வழக்குத் தொடருநர் லூயிஸ் மொரெனோ ஒகம்போவின் (Luis Moreno Ocampo) அவதானித்தபடி, இஸ்ரேலின் காஸா முற்றுகையானது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ குழுவொன்றின் பெளதிக அழிவுக்கான நிலைமைகளை வழிவகுப்பானது இன அழிப்பிற்கு எதிராக சர்வதேச உடன்படிக்கையின் 2(C) சரத்தின் கீழ் இனவழிப்பாக (Genocide) ஆக அமையக்கூடும்.நிகழ்வு பூர்வமான ஆர்ட்சக் (defacto state of Artsakh) (நாகொர்னோ-கரபாஹ்) அரசின் அழிவு மற்றும் 24 மணித்தியாலங்களில் 100,000க்கும் அதிகமான ஆர்மேனியர்களின் இடப்பெயர்வின்போது ஐக்கிய நாடுகள் சபையினதும் மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையினதும் இயலாமையை நாங்கள் அண்மையில் கண்டிருந்தோம்.ஈழத் தமிழர்களாகிய நாமும், இவ்வாறானதொரு நிலையை எதிர்கொண்டிருந்தோம். 2009ஆம் ஆண்டில் எமது நிகழ்வு பூர்வமான தமிழீழ நாடானது (defacto state of Tamil Eelam) சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி அழிக்கப்பட்டிருந்ததுடன், இதன் காரணமாக 100,000க்கும் அதிகமான தமிழர் கொல்லப்பட்டிருந்தனர். இதை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் எதுவும் செய்திருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மீளாய்வு அறிக்கையின் (UN Internal Review Report - Petrie Report) அடிப்படையில், படுகொலை மற்றும் இதன் பேரழிவுப் பின்விளைவுகளை ஐக்கிய நாடுகள் சபை அறிந்திருந்தபோதும் அது தலையிடுவதில்லை எனத் தீர்மானித்திருந்தது. இது தவிர, தமிழர்களுக்கெதிரான அந்த அட்டூழியக் குற்றங்கள் புரியப்பட்டு 14 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளபோதும் தற்போது வரையில் எவரும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை. இந்த சர்வதேச நீதியமைப்பின் தோல்வியால், பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறும் வகையில் பாதிக்கப்பட்டவர்களாலான சர்வதேச நீதிப் (Victims Driven Justice) பரப்புரையொன்றை 2019 ஆம் ஆண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.தமிழ் இனவழிப்புப் போல இஸ்ரேலிய காஸா முரண்பாட்டின்போது தற்போதைய அட்டூழியங்கள் மற்றும் போர்க் குற்றங்களானவை ஒரு சில தனிநபர்களால் புரியப்பட்டவையல்ல. இது அரசொன்றால் புரியப்பட்டது. எவ்வாறாயினும், அரசை பொறுப்புக்கூறலுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறுபட்ட உள்ளூர் சட்டவாட்சி முறைமைகளில் (domestic prosecution), இறையாண்மை விலக்கு (Sovereign Immunity) எனப்படுகின்ற கோட்பாடு தடையாகவுள்ளது. இதனை நீக்குவதற்காக, பாதிக்கப்பட்டவர்களாலான நீதிப் பொறிமுறையுடன் (Victims Driven International Justice), உள்ளூர் நீதிமன்றங்களில் அடூழியங்கள் புரிந்த அரசுகளுக்கு எதிராக நீதி கோரும் முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் இறையாண்மை விலக்கு Sovereion  Tmmunity) சட்டக் கோட்பாட்டை சட்டங்களில் இருந்து நீக்கும் பரப்புரையொன்றையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.மேலுள்ளவை அனைத்தும் சர்வதேச அமைதி மற்றும் நீதிக்கான புதிய பொறிமுறைகள் மற்றும் புதிய நெறிமுறைகளுக்கான அத்தியாவசியத்தையும் அவசரத்தையும் வலியுறுத்துகின்றன. இன்னொரு அண்மைய கருத்தொன்றில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரான லூயிஸ் மொரெனோ ஒகம்போ (Luis Moreno Ocampo), "நாங்கள் தொடர்ந்தும் காலத்துக்கேற்றவாறு வளருவதுடன், முரண்பாடுகளுக்கு தீர்வுகள் காண்பதற்கு வேறு முறைமைகளை உருவாக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தவகையில், அமைதி மற்றும் நீதிக்கான புதிய பொறிமுறைகள் மற்றும் புதிய நெறிமுறைகளுக்கான பூகோள பரப்புரையொன்று தேவைப்படுகிறது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement