இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான குறைந்த கட்டண நேரடி விமான சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எயார் ஏசியாவின் AIQ-140 விமானம் தாய்லாந்தின் Don Mueang சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று இரவு 10.10 மணியளவில் வந்தடைந்துள்ளது.
குறித்த விமானத்தில் 134 பயணிகள் மற்றும் 07 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.
இந்த விமானத்தையும் பயணிகளையும் வரவேற்கும் வைபவம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றது.
அத்துடன் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 174 பயணிகளுடன் தாய்லாந்து பயணத்தை மேற்கொண்டது.
அதற்கமைய, தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்திற்கு 04 விமானங்கள் சேவையில் ஈடுபடுவதுடன் திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் குறித்த விமானங்கள் சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையர்களுக்கு குட்நியூஸ். குறைந்த கட்டணத்தில் தாய்லாந்துக்கு செல்ல வாய்ப்பு. samugammedia இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான குறைந்த கட்டண நேரடி விமான சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.எயார் ஏசியாவின் AIQ-140 விமானம் தாய்லாந்தின் Don Mueang சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று இரவு 10.10 மணியளவில் வந்தடைந்துள்ளது.குறித்த விமானத்தில் 134 பயணிகள் மற்றும் 07 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.
இந்த விமானத்தையும் பயணிகளையும் வரவேற்கும் வைபவம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றது.அத்துடன் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 174 பயணிகளுடன் தாய்லாந்து பயணத்தை மேற்கொண்டது.அதற்கமைய, தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்திற்கு 04 விமானங்கள் சேவையில் ஈடுபடுவதுடன் திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் குறித்த விமானங்கள் சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.