தொழில் வல்லுநர்கள் மற்றும் திறமையான பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நாட்டில் இருந்து 14 ஆயிரம் தொழில் வல்லுநர்கள் மற்றும் பணியாளர்கள் வெளியேறியுள்ளதால் பொருளாதாரத் துறைகள் கடும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2020ம் மற்றும் 2021ம் ஆண்டுகளில் நாட்டில் இருந்து வெளியேறிய தொழில் வல்லுநர்களின் அளவை விடவும் கடந்த ஆண்டு பாரியளவான தொழில் வல்லுநர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
கடந்த ஆண்டில் மாத்திரம், 14 ஆயிரத்து 307 தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இது நாட்டின் பாரியளவான நிபுணர்களின் வெளியேற்றமாக கருதப்படுகின்றது.
கடந்த ஆண்டு 8 ஆயிரத்து 130 நடுத்தர அளவிலான ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்துக்கு அச்சுறுத்தல் - மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை samugammedia தொழில் வல்லுநர்கள் மற்றும் திறமையான பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.நாட்டில் இருந்து 14 ஆயிரம் தொழில் வல்லுநர்கள் மற்றும் பணியாளர்கள் வெளியேறியுள்ளதால் பொருளாதாரத் துறைகள் கடும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.2020ம் மற்றும் 2021ம் ஆண்டுகளில் நாட்டில் இருந்து வெளியேறிய தொழில் வல்லுநர்களின் அளவை விடவும் கடந்த ஆண்டு பாரியளவான தொழில் வல்லுநர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.கடந்த ஆண்டில் மாத்திரம், 14 ஆயிரத்து 307 தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக தரவுகள் தெரிவிக்கின்றன.இது நாட்டின் பாரியளவான நிபுணர்களின் வெளியேற்றமாக கருதப்படுகின்றது.கடந்த ஆண்டு 8 ஆயிரத்து 130 நடுத்தர அளவிலான ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.