• May 07 2025

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் விலை குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Jan 22nd 2025, 7:55 am
image

 

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் விலை தற்போதைய, பயன்படுத்தப்பட்ட வாகனங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பொருளாதாரத்தை நிலைப்படுத்துதல் மற்றும் நிதி நிறுவனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நிலை ஏற்படும் என கூறியுள்ளார். 

பயன்படுத்தப்பட்ட வாகன விலைகளின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி, வங்கிகள் மற்றும் குத்தகை நிறுவனங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இது நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். 

அத்துடன், அந்நிய செலாவணி இருப்புக்களை திறம்பட நிர்வகிக்க, 2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கு 1.2 பில்லியன் டொலர்களை ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மற்றொரு பொருளாதார நெருக்கடியைத் தூண்டக்கூடிய வெளிநாட்டு இருப்புக்கள் குறைவதைத் தடுக்க வாகன இறக்குமதிக்கான வரம்புகளைப் பராமரிப்பது முக்கியமானது. 

ஒழுங்குபடுத்தப்படாத இறக்குமதிகள் நமது வெளிநாட்டு டொலர் இருப்புக்களை முழுவதுமாகக் குறைக்கக்கூடும். 

எதிர்வரும் பெப்ரவரி மாதம், அரசாங்கம் வாகன இறக்குமதியை மீண்டும் அனுமதிக்க உள்ளது, ஆனால் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார். 


இந்நிலையில்  இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது வாகன விலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கலாம் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

வாகன இறக்குமதி மூன்று கட்டங்களின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கும் என்றும், கடைசி கட்டமே தனியார் வாகனங்களுக்கானது என்றும் தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் அதே வேளையில் வாகன இறக்குமதிகள் அனுமதிக்கப்படும் என்றும் வரிகளில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய போட்டி விலையின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளூர் சந்தைக்கு வரும்போது, வாகன விலையில் குறைவு ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


 

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் விலை குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு  இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் விலை தற்போதைய, பயன்படுத்தப்பட்ட வாகனங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் பொருளாதாரத்தை நிலைப்படுத்துதல் மற்றும் நிதி நிறுவனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நிலை ஏற்படும் என கூறியுள்ளார். பயன்படுத்தப்பட்ட வாகன விலைகளின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி, வங்கிகள் மற்றும் குத்தகை நிறுவனங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இது நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். அத்துடன், அந்நிய செலாவணி இருப்புக்களை திறம்பட நிர்வகிக்க, 2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கு 1.2 பில்லியன் டொலர்களை ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.மற்றொரு பொருளாதார நெருக்கடியைத் தூண்டக்கூடிய வெளிநாட்டு இருப்புக்கள் குறைவதைத் தடுக்க வாகன இறக்குமதிக்கான வரம்புகளைப் பராமரிப்பது முக்கியமானது. ஒழுங்குபடுத்தப்படாத இறக்குமதிகள் நமது வெளிநாட்டு டொலர் இருப்புக்களை முழுவதுமாகக் குறைக்கக்கூடும். எதிர்வரும் பெப்ரவரி மாதம், அரசாங்கம் வாகன இறக்குமதியை மீண்டும் அனுமதிக்க உள்ளது, ஆனால் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில்  இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது வாகன விலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கலாம் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.வாகன இறக்குமதி மூன்று கட்டங்களின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கும் என்றும், கடைசி கட்டமே தனியார் வாகனங்களுக்கானது என்றும் தெரிவித்துள்ளார்.அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் அதே வேளையில் வாகன இறக்குமதிகள் அனுமதிக்கப்படும் என்றும் வரிகளில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.தற்போதைய போட்டி விலையின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளூர் சந்தைக்கு வரும்போது, வாகன விலையில் குறைவு ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now