• May 03 2024

அரச வீட்டு திட்டங்கள்..! யாழ் அரச அதிபரின் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார் எம்.பி..!samugammedia

Sharmi / Jun 1st 2023, 7:28 pm
image

Advertisement

அரச வீட்டு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட வீடுகளில் குடியமராத பயனாளிகளின் வீடுகளை திரும்பப் பெற வேண்டும் என்ற யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனின் கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிராகரித்தார்.

நேற்றையதினம் புதன்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இரண்டாவது கலந்துரையாடலில் அரசு அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அபிவிருத்திக் கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் வழங்கப்பட்ட அரச வீட்டுத் திட்டங்களில் குடியமராதவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆராயப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் வழங்கப்பட்ட வீடு திட்ட வீடுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் பயனாளிகள்  வாசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பிரதேச செயலாளர்  முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக சங்கானை தெல்லிப்பழை சண்டிலிப்பாய் மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலகங்களில் அதிகளவிலான வீடுகள் பயனாளிகள் என்று காணப்படுவதாக அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அரச வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டதன் நோக்கத்தை பயனாளிகள் பூர்த்தி செய்யவில்லையாயின் அதனை மீளப் பெறுவதற்கு சுற்று நிருபம் இருப்பதாக தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், காணி வீடு இல்லாதவர்கள் அரச வீட்டு திட்டத்தை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுத் திட்டங்களை மீளப் பெற முடியாது என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தா, பலர் வீட்டு திட்டங்களுக்காக காத்திருக்கும் நிலையில் வழங்கிய வீட்டு திட்டங்களை  பயன்படுத்தாதவர்களுக்கு எவ்வாறு நடவடிக்கை எடுப்பது எனக் கேள்வி எழுப்பினார்.

இதன் போது பதில் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வீட்டுத் திட்டங்களை பெற்றவர்கள் தொழில் மற்றும் பிள்ளைகளின் கல்வி தேவை கருதி பிறிதொரு  இடத்தில் வாழலாம் அதற்காக அவர்களின் திட்டங்களை மீள பெற முடியாது.

ஒருவேளை அரச வீட்டுத் திட்டங்களுக்கு மேலதிகமாக வீடு மற்றும் காணிகள் உள்ளவர்களாயின் அதனை சரிவர ஆராய்ந்து மாற்று நடவடிக்கைகளை பின்பற்ற முடியும் என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், யாழ். மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் வீட்டு திட்டங்களில் குடி அமராதவர்களுக்கு மாற்று இடங்களில் வீடு காணிகள் இருக்கிறதா என ஆராய்ந்து விரிவான விபரங்களுடன் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் .

அரச வீட்டு திட்டங்கள். யாழ் அரச அதிபரின் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார் எம்.பி.samugammedia அரச வீட்டு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட வீடுகளில் குடியமராத பயனாளிகளின் வீடுகளை திரும்பப் பெற வேண்டும் என்ற யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனின் கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிராகரித்தார்.நேற்றையதினம் புதன்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இரண்டாவது கலந்துரையாடலில் அரசு அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அபிவிருத்திக் கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் வழங்கப்பட்ட அரச வீட்டுத் திட்டங்களில் குடியமராதவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆராயப்பட்டது.யாழ். மாவட்டத்தில் வழங்கப்பட்ட வீடு திட்ட வீடுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் பயனாளிகள்  வாசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பிரதேச செயலாளர்  முன்வைக்கப்பட்டது.குறிப்பாக சங்கானை தெல்லிப்பழை சண்டிலிப்பாய் மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலகங்களில் அதிகளவிலான வீடுகள் பயனாளிகள் என்று காணப்படுவதாக அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.இதன் போது கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அரச வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டதன் நோக்கத்தை பயனாளிகள் பூர்த்தி செய்யவில்லையாயின் அதனை மீளப் பெறுவதற்கு சுற்று நிருபம் இருப்பதாக தெரிவித்தார்.இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், காணி வீடு இல்லாதவர்கள் அரச வீட்டு திட்டத்தை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுத் திட்டங்களை மீளப் பெற முடியாது என தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தா, பலர் வீட்டு திட்டங்களுக்காக காத்திருக்கும் நிலையில் வழங்கிய வீட்டு திட்டங்களை  பயன்படுத்தாதவர்களுக்கு எவ்வாறு நடவடிக்கை எடுப்பது எனக் கேள்வி எழுப்பினார்.இதன் போது பதில் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வீட்டுத் திட்டங்களை பெற்றவர்கள் தொழில் மற்றும் பிள்ளைகளின் கல்வி தேவை கருதி பிறிதொரு  இடத்தில் வாழலாம் அதற்காக அவர்களின் திட்டங்களை மீள பெற முடியாது.ஒருவேளை அரச வீட்டுத் திட்டங்களுக்கு மேலதிகமாக வீடு மற்றும் காணிகள் உள்ளவர்களாயின் அதனை சரிவர ஆராய்ந்து மாற்று நடவடிக்கைகளை பின்பற்ற முடியும் என தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், யாழ். மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் வீட்டு திட்டங்களில் குடி அமராதவர்களுக்கு மாற்று இடங்களில் வீடு காணிகள் இருக்கிறதா என ஆராய்ந்து விரிவான விபரங்களுடன் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் .

Advertisement

Advertisement

Advertisement