இன்று நாடளாவிய ரீதியில் வைத்தியர்களின் பங்களிப்புடன் இன்று புதன்கிழமை (11) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுதுள்ளனர்.
கடந்த வாரம் இடம் பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்க மத்திய குழு கூட்டத்தில் ஏற்படுத்திய முடிவுகளின் படி இன்றுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படாத நிலையிலேயே ஏற்க்கனவே குறிப்பிட்டபடி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை ஆரம்பமாகி சுமார் ஒருமணித்தியாலம் இடம்பெற்றுள்ளது.