• May 17 2024

இலங்கையில் பெரும் சோகம்..! ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் எடுத்த விபரீத முடிவு! samugammedia

Chithra / May 20th 2023, 10:35 am
image

Advertisement

நானுஓயா ரயில் நிலையத்தின் முன் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் விபரீத முடிவு எடுத்து உயிர்மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொட்டக்கலை ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள ஸ்லீப்பர் கட்டைகளை ஏற்றிச் சென்ற ரயிலில் தண்டவாளத்தில் தலை வைத்து உயிரிழந்துள்ளார்.

நீண்ட நேரம் காத்திருந்து யாரும் கவனிக்காத நேரத்தில் நடைமேடையில் இருந்து வேகமாக பாய்ந்து ரயில் பெட்டிகளுக்கு கீழே தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து 

ரயில் சக்கரத்தில் சிக்கி இளைஞன் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா லபுக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோவன் கோவர்தனன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இலங்கையில் பெரும் சோகம். ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் எடுத்த விபரீத முடிவு samugammedia நானுஓயா ரயில் நிலையத்தின் முன் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் விபரீத முடிவு எடுத்து உயிர்மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொட்டக்கலை ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள ஸ்லீப்பர் கட்டைகளை ஏற்றிச் சென்ற ரயிலில் தண்டவாளத்தில் தலை வைத்து உயிரிழந்துள்ளார்.நீண்ட நேரம் காத்திருந்து யாரும் கவனிக்காத நேரத்தில் நடைமேடையில் இருந்து வேகமாக பாய்ந்து ரயில் பெட்டிகளுக்கு கீழே தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து ரயில் சக்கரத்தில் சிக்கி இளைஞன் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நுவரெலியா லபுக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோவன் கோவர்தனன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement