• Jun 11 2025

சுகாதார அமைச்சர் உன்னையும் பிற தொழிற்சங்கங்களையும் மிரட்ட முயற்சி - ரவி குமுதேஷ் குற்றச்சாட்டு

Chithra / Jun 10th 2025, 10:45 am
image


மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இந்த இடைநீக்கம் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. 

இதன்படி, இடைநீக்க காலத்தில் அவருக்கு சம்பளம் அல்லது வேறு எந்தக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், ஒழுங்கு நடவடிக்கைகள் முடியும் வரை அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ரவி குமுதேஷ், நிறுவன விதிகளை மீறி 2024 பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதால் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  இடைநீக்கம் செய்யப்பட்டமை குறித்து தனக்கு உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

பணி இடைநீக்கம் தொடர்புடைய கடிதம் ஊடக நிறுவனங்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது

அவ்வாறு செய்வதன் மூலம், சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தன்னையும் பிற தொழிற்சங்கங்களையும் மிரட்ட முயற்சிக்கிறார் என்றும் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் உன்னையும் பிற தொழிற்சங்கங்களையும் மிரட்ட முயற்சி - ரவி குமுதேஷ் குற்றச்சாட்டு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடைநீக்கம் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, இடைநீக்க காலத்தில் அவருக்கு சம்பளம் அல்லது வேறு எந்தக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், ஒழுங்கு நடவடிக்கைகள் முடியும் வரை அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரவி குமுதேஷ், நிறுவன விதிகளை மீறி 2024 பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதால் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில்  இடைநீக்கம் செய்யப்பட்டமை குறித்து தனக்கு உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.பணி இடைநீக்கம் தொடர்புடைய கடிதம் ஊடக நிறுவனங்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதுஅவ்வாறு செய்வதன் மூலம், சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தன்னையும் பிற தொழிற்சங்கங்களையும் மிரட்ட முயற்சிக்கிறார் என்றும் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement