முழு சுகாதாரத் துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 3 ஆம்திகதி வேலைநிறுத்தம் செய்ய சுகாதார சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மோசமான நிலை உள்ளிட்ட சுகாதாரத்துறையின் ஒட்டுமொத்த வீழ்ச்சியை கண்டித்து இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக சுகாதார சங்க தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அடையாள வேலைநிறுத்தம் அனைத்து இலங்கையர்களுக்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும், அந்த நடவடிக்கைகளுக்கு மக்களின் ஆதரவையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக தொழிற்சங்க தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, கொழும்பில் புதன்கிழமை கூடும் சுகாதார நிபுணர்களிடம் இருந்து புதிய தேசிய இயக்கம் ஒன்றை அன்றைய தினம் ஸ்தாபிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.