உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு மீதான விவாதம், நாளையதினம் (21) இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான விவாதம், நாளை மறுதினம் (22) இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நாடாளுமன்ற அமர்வு காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லெரீன் பெரேரா, ரெஜினோல்ட் குரே, புத்திக குருகுலரத்ன, முத்து சிவலிங்கம் ஆகியோரின் அனுதாபப் பிரேரணைக்காகவே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான சபை விவாதம் - வெளியான தகவல். samugammedia உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு மீதான விவாதம், நாளையதினம் (21) இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான விவாதம், நாளை மறுதினம் (22) இடம்பெறவுள்ளது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நாடாளுமன்ற அமர்வு காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.இதேவேளை எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லெரீன் பெரேரா, ரெஜினோல்ட் குரே, புத்திக குருகுலரத்ன, முத்து சிவலிங்கம் ஆகியோரின் அனுதாபப் பிரேரணைக்காகவே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.