• May 06 2024

இலங்கையில் முதன்முறையாக பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பெருந்தொகை கொழுப்பு

Chithra / Jan 13th 2024, 8:00 am
image

Advertisement

 

கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது.

61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக தொங்கிய நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையான 61 வயதுடைய பெண் ஒரு குழந்தையின் தாய் எனவும், எவ்வித பாதிப்பும் இன்றி நலமுடன் இருப்பதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக இவ்வகையான சத்திரசிகிச்சையில் 4-5 லீற்றர் வரை கொழுப்பு அகற்றப்படுவதாகவும், 

இந்த நாட்டில் மட்டுமின்றி உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய அளவிலான கொழுப்பு அகற்றுவதற்கான சத்திரசிகிச்சை எதுவும் இடம்பெறவில்லை எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், முதுகு வலி, நடப்பதில் சிரமம் போன்ற காரணங்களால் மன அழுத்தமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.

இதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, அவர் சிறப்பு மருத்துவர் ஜயவர்த்தனவிடம் வந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அதன்பிறகு, உடல் எடை வேகமாகக் குறைந்ததால், அவரால் எளிதாக நடக்க முடிந்தது என்று மருத்துவர் கூறினார்.

சத்திரசிகிச்சையின் பின்னர் வயிறு மேலும் நீண்டு விரிவடைந்து காணப்பட்டதால் நேற்று அது தொடர்பான சத்திரசிகிச்சை செய்து வயிற்றிலிருந்த கொழுப்பை அகற்றியதாகவும் அவர் கூறினார்.  

இலங்கையில் முதன்முறையாக பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பெருந்தொகை கொழுப்பு  கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது.61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக தொங்கிய நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையான 61 வயதுடைய பெண் ஒரு குழந்தையின் தாய் எனவும், எவ்வித பாதிப்பும் இன்றி நலமுடன் இருப்பதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.பொதுவாக இவ்வகையான சத்திரசிகிச்சையில் 4-5 லீற்றர் வரை கொழுப்பு அகற்றப்படுவதாகவும், இந்த நாட்டில் மட்டுமின்றி உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய அளவிலான கொழுப்பு அகற்றுவதற்கான சத்திரசிகிச்சை எதுவும் இடம்பெறவில்லை எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.குறித்த பெண் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், முதுகு வலி, நடப்பதில் சிரமம் போன்ற காரணங்களால் மன அழுத்தமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.இதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, அவர் சிறப்பு மருத்துவர் ஜயவர்த்தனவிடம் வந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.அதன்பிறகு, உடல் எடை வேகமாகக் குறைந்ததால், அவரால் எளிதாக நடக்க முடிந்தது என்று மருத்துவர் கூறினார்.சத்திரசிகிச்சையின் பின்னர் வயிறு மேலும் நீண்டு விரிவடைந்து காணப்பட்டதால் நேற்று அது தொடர்பான சத்திரசிகிச்சை செய்து வயிற்றிலிருந்த கொழுப்பை அகற்றியதாகவும் அவர் கூறினார்.  

Advertisement

Advertisement

Advertisement