முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டிய போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் கொக்குளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது பெண் போராளிகளின் சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.