யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது.
சமய சம்பிரதாயங்களுடன் பெரும் போகத்துக்கான நெல் விதைப்பு விசேட வழிபாடுகளின் பின்னர் இன்று காலை இடம்பெற்றது.
இதில் பெருமளவிலான விவசாயிகள் பெரும் போகத்துக்கான நெல் விதைப்பில் ஈடுபட்டதுடன் தமது வயல் நிலங்களை பண்படுத்தியதுடன், வரம்பு கட்டலிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.