• May 20 2024

மன்னார் திருக்கேதீஸ்வரத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் முக்கியஸ்தர்கள்!

Sharmi / Feb 10th 2023, 1:52 pm
image

Advertisement

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நேற்று புதன்கிழமை(9) வருகை தந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் இன்றைய தினம்(10) காலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற் கொண்டனர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தனர்.

இதன் போது இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோருடன் யாழ்ப்பாண - இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெய பாஸ்கர்   கலந்து கொண்டார்.  

இதன் போது விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதோடு,இந்திய அரசின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டதோடு,ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து மன்னாரில் இடம் பெற்ற இலங்கை - இந்தியா நட்புறவு நாடுகளின் தூதரக ஏற்பாட்டில்  மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


மன்னார் திருக்கேதீஸ்வரத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நேற்று புதன்கிழமை(9) வருகை தந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் இன்றைய தினம்(10) காலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற் கொண்டனர்.இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தனர்.இதன் போது இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோருடன் யாழ்ப்பாண - இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெய பாஸ்கர்   கலந்து கொண்டார்.  இதன் போது விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதோடு,இந்திய அரசின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டதோடு,ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.அதனைத் தொடர்ந்து மன்னாரில் இடம் பெற்ற இலங்கை - இந்தியா நட்புறவு நாடுகளின் தூதரக ஏற்பாட்டில்  மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement