• May 20 2024

புத்தளத்தில், வீட்டுக்கு தீ வைத்த விசமிகள்- சொத்துக்கள் எரிந்து நாசம்..!samugammedia

Tamil nila / Apr 26th 2023, 6:29 pm
image

Advertisement

புத்தளம் வண்ணாத்திவில்லுப் பகுதியில் இனந்தியாத சில விசமிகளினால் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதன்போது வீட்டிலிருந்த பல சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.



புத்தளம் வண்ணாத்திவில்லு 13ம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் இனந்தெரியாத விசமிகளினால் வீட்டிற்குத் தீவைக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.



இதன்போது ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டதை அடுத்து வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்ததாகவும் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.



பின்னர், ஒரு வார காலத்திற்குப் பிறகு இன்று அதிகாலை மீண்டும் விசமிகளினால் தனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.



குறித்த வீடு தீப்பிடித்துக் கொண்டிருந்த போது வீட்டில் 5 பேர் இருந்ததாகவும், தீ பரவியதும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் வீட்டிலிருந்தவர்கள் இதன்போது தெரிவித்தனர்

இதன்போது தீயினால் வீட்டில் இருந்த பல பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் வண்ணாத்திவில்லு  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதன் போது சம்பவ இடத்திற்குச் சென்று வீட்டை பார்வையிட்டதுடன் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட உள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.


புத்தளத்தில், வீட்டுக்கு தீ வைத்த விசமிகள்- சொத்துக்கள் எரிந்து நாசம்.samugammedia புத்தளம் வண்ணாத்திவில்லுப் பகுதியில் இனந்தியாத சில விசமிகளினால் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதன்போது வீட்டிலிருந்த பல சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.புத்தளம் வண்ணாத்திவில்லு 13ம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் இனந்தெரியாத விசமிகளினால் வீட்டிற்குத் தீவைக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.இதன்போது ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டதை அடுத்து வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்ததாகவும் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.பின்னர், ஒரு வார காலத்திற்குப் பிறகு இன்று அதிகாலை மீண்டும் விசமிகளினால் தனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.குறித்த வீடு தீப்பிடித்துக் கொண்டிருந்த போது வீட்டில் 5 பேர் இருந்ததாகவும், தீ பரவியதும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் வீட்டிலிருந்தவர்கள் இதன்போது தெரிவித்தனர்இதன்போது தீயினால் வீட்டில் இருந்த பல பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் வண்ணாத்திவில்லு  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.இதன் போது சம்பவ இடத்திற்குச் சென்று வீட்டை பார்வையிட்டதுடன் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட உள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement