யுத்ததில் அதிகமாக கிழக்கு மாகாணமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு வறுமைநிலையினை சாதகமாக பயன்படுத்தி மத மாற்றங்களை சில பாதிரியார்கள் முன்னெடுப்பதாக சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர், கலாநிதி ஆறு திருமுருகன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்றையதினம் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற சைவ சமயத்திற்கு எதிராக அடக்குமுறை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.
கிழக்கு மாகாணத்தில் முச்சக்கரவண்டியினை வாங்கி கொடுத்து மத மாற்றம் இடம்பெறுவதாகவும் இதனை தட்டி கேட்பதற்கு வலுவான கட்டமைப்பு இல்லை என்றும் ஆறு திருமுருகன் கவலை வெளியிட்டிருந்தார்.
இந்த பூமி சிவ பூமி என்றும் ஆறு திருமுருகன் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.
சைவ மக்களுக்கு சொந்தமான இந்த மண் தொடர்ந்தும் பறிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
கிழக்கில் முச்சக்கர வண்டியை பரிசாக வழங்கி சைவ இளைஞர்கள் மதமாற்றப்படுகின்றனர் - வெளியாக அதிர்ச்சி தகவல் Samugammedia யுத்ததில் அதிகமாக கிழக்கு மாகாணமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு வறுமைநிலையினை சாதகமாக பயன்படுத்தி மத மாற்றங்களை சில பாதிரியார்கள் முன்னெடுப்பதாக சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர், கலாநிதி ஆறு திருமுருகன் குற்றம் சுமத்தியுள்ளார்.நேற்றையதினம் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற சைவ சமயத்திற்கு எதிராக அடக்குமுறை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.கிழக்கு மாகாணத்தில் முச்சக்கரவண்டியினை வாங்கி கொடுத்து மத மாற்றம் இடம்பெறுவதாகவும் இதனை தட்டி கேட்பதற்கு வலுவான கட்டமைப்பு இல்லை என்றும் ஆறு திருமுருகன் கவலை வெளியிட்டிருந்தார்.இந்த பூமி சிவ பூமி என்றும் ஆறு திருமுருகன் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.சைவ மக்களுக்கு சொந்தமான இந்த மண் தொடர்ந்தும் பறிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.