திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் இயங்கிய தனியார் மாலை நேர வகுப்பில் வைத்து மாணவிகள் இருவருக்கு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்றார் சந்தேகத்தின் பேரில் பாடசாலை ஆசிரியொருவர் நேற்று(01) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பூர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் நேற்று மாலை சம்பூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்ததற்கமைவாக உடனடியாக சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாடு செய்த இரண்டு இரண்டு மாணவிகளும் தரம் 11 இல் கல்வி பயிலுகின்றவர்கள் என்பதோடு இரண்டு மாணவிகளும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சம்பூர் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மாலை நேர வகுப்பில் மாணவிகள் மீது சில்மிஷம். சிக்கிய ஆசிரியர்.samugammedia திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் இயங்கிய தனியார் மாலை நேர வகுப்பில் வைத்து மாணவிகள் இருவருக்கு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்றார் சந்தேகத்தின் பேரில் பாடசாலை ஆசிரியொருவர் நேற்று(01) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பூர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுமிகள் நேற்று மாலை சம்பூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்ததற்கமைவாக உடனடியாக சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.முறைப்பாடு செய்த இரண்டு இரண்டு மாணவிகளும் தரம் 11 இல் கல்வி பயிலுகின்றவர்கள் என்பதோடு இரண்டு மாணவிகளும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சம்பூர் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.