பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு, இன்று (10) வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
முன்னதாக 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 7,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
இந்த அதிகரித்த கொடுப்பனவு கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2026 ஜனவரி மாதத்துக்குரிய பத்தாயிரம் ரூபா புலமைப்பரிசில் கொடுப்பனவு, மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு - வெளியான விசேட அறிவிப்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு, இன்று (10) வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.முன்னதாக 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 7,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.இந்த அதிகரித்த கொடுப்பனவு கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 2026 ஜனவரி மாதத்துக்குரிய பத்தாயிரம் ரூபா புலமைப்பரிசில் கொடுப்பனவு, மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.