இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்தியாவிற்கு வழங்க இலங்கை அணித்தலைவர் தீர்மானித்திருந்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியுள்ளது.