77 ஆயிரம் ரூபா வாடகைக்கு ஜெயில் அறை போன்ற அமைப்புடன் கூடிய குடியிருப்பு ஒன்று விடப்படுவதாக காணொளி ஒன்று இணையத்தில் பரவி பார்வையாளர்களை திசை திருப்பியுள்ளது.
இங்கிலாந்தின் டட்லி பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான குறித்த கட்டிடம் கடந்த 2017-ம் ஆண்டு மூடப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்குள்ள ஒரே ஒரு சிறை போன்ற அறையுடன் கூடிய பகுதியை பிளாட்டாக மாற்றி அதனை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கு வாடகை கட்டணமாக மாதம் 750 பவுண்டுகள் நிர்ணயித்துள்ளதாகவும் சிறை அமைப்புடன் கூடிய அறை மட்டுமல்லாது அந்த பிளாட்டின் சமையலறை மற்றும் 3 அறைகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.