இலங்கை கடற்படையினரால் கச்சதீவில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு இந்தியாவினால் கொடையாக வழங்கப்பட்ட கச்சதீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளித்திருப்பதுடன் இவ் நடவடிக்கைக்கு தமிழகம் மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
கச்சதீவில் புனித அந்தோணியார் ஆலயம் மட்டுமே இருப்பதுடன் அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் மற்றும் ஈழத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தமிழர்கள் பங்கேற்று வருகின்றனர்.
அவ்வாலய திருவிழா மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்வதுடன் புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது கச்சதீவை சிங்களமயமாக்கும் செயற்பாடாக காணப்படுகின்றது.
புத்தர் சிலைக்கு ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டால் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதுடன், மத நல்லிணக்கத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் அமையும்.
இவற்றினை கடந்து புத்தர் சிலை வழிபாடு என்ற பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சதீவில் முகாமிடச் செய்து, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவை உளவு பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுவதோடு, இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்பதனையும் மறுக்க முடியாது.
கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பினும் அந்தோணியார் ஆலயத் திருவிழா மற்றும் அடிப்படை வளர்ச்சிப் பணிகள் போன்றவற்றிற்கு இந்தியாவே உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் தீர்க்கமாக குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவில் சிங்கள அரசால் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலையை அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்SamugamMedia இலங்கை கடற்படையினரால் கச்சதீவில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவிக்கையில், இலங்கைக்கு இந்தியாவினால் கொடையாக வழங்கப்பட்ட கச்சதீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளித்திருப்பதுடன் இவ் நடவடிக்கைக்கு தமிழகம் மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். கச்சதீவில் புனித அந்தோணியார் ஆலயம் மட்டுமே இருப்பதுடன் அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் மற்றும் ஈழத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தமிழர்கள் பங்கேற்று வருகின்றனர். அவ்வாலய திருவிழா மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்வதுடன் புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது கச்சதீவை சிங்களமயமாக்கும் செயற்பாடாக காணப்படுகின்றது. புத்தர் சிலைக்கு ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டால் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதுடன், மத நல்லிணக்கத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் அமையும். இவற்றினை கடந்து புத்தர் சிலை வழிபாடு என்ற பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சதீவில் முகாமிடச் செய்து, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவை உளவு பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுவதோடு, இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்பதனையும் மறுக்க முடியாது.கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பினும் அந்தோணியார் ஆலயத் திருவிழா மற்றும் அடிப்படை வளர்ச்சிப் பணிகள் போன்றவற்றிற்கு இந்தியாவே உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆகவே இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் தீர்க்கமாக குறிப்பிட்டுள்ளார்.