• Oct 18 2024

தமிழர் பகுதிகளுக்கு ஒவ்வொருநாளும் நுழைவதற்கு புதிய அட்டவணை - தமிழர்களின் இருப்பை அழிப்பதே பிரதான நோக்கமா..? samugammedia

Chithra / Apr 20th 2023, 6:00 pm
image

Advertisement

இலங்கையில் கடந்த மூன்று வருடங்களாக தொல்லியல் திணைக்கம், தமிழர்களின் வழிபாட்டு தளங்கள் மற்றும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள், தமிழர்களுக்கு சொந்தமான இடங்களை தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரிலே கையகப்படுத்துவதாக மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்கள் பேரவைக்கான இயக்கத்தில் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ரஜீவ்காந்த் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த திணைக்களத்தில் செயற்பாடு அண்மைக்காலமாக மிகமோசமான நிலைக்கு சென்றுள்ளது.

ஒவ்வொருநாளும் தமிழர்களின் பகுதிகளுக்கு சென்று அதில் பௌத்த சின்னங்கள் இருப்பாதாக கூறி இது தொல்லியல் திணைக்களத்திற்கே உரிமையானது என்று கூறி அதனை கையகப்படுத்த முயற்சிப்பதாக அவர்  குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்க்காமல் அதனை மழுங்கடிக்கும் செயற்பாடுகளே தொடர்கிறது.

தமிழர்களுடைய இருப்பை முற்றுமுழுதாக இல்லாமல் செய்வதற்கே இன்று சிங்கள பௌத்த பேரினவாதம் தொல்லியல் திணைக்களத்தை பயன்படுத்துவதாக  அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

தமிழர் பகுதிகளுக்கு ஒவ்வொருநாளும் நுழைவதற்கு புதிய அட்டவணை - தமிழர்களின் இருப்பை அழிப்பதே பிரதான நோக்கமா. samugammedia இலங்கையில் கடந்த மூன்று வருடங்களாக தொல்லியல் திணைக்கம், தமிழர்களின் வழிபாட்டு தளங்கள் மற்றும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள், தமிழர்களுக்கு சொந்தமான இடங்களை தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரிலே கையகப்படுத்துவதாக மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் குற்றம் சுமத்தியுள்ளார்.மக்கள் பேரவைக்கான இயக்கத்தில் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ரஜீவ்காந்த் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.இந்த திணைக்களத்தில் செயற்பாடு அண்மைக்காலமாக மிகமோசமான நிலைக்கு சென்றுள்ளது.ஒவ்வொருநாளும் தமிழர்களின் பகுதிகளுக்கு சென்று அதில் பௌத்த சின்னங்கள் இருப்பாதாக கூறி இது தொல்லியல் திணைக்களத்திற்கே உரிமையானது என்று கூறி அதனை கையகப்படுத்த முயற்சிப்பதாக அவர்  குற்றம் சுமத்தியுள்ளார்.தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்க்காமல் அதனை மழுங்கடிக்கும் செயற்பாடுகளே தொடர்கிறது.தமிழர்களுடைய இருப்பை முற்றுமுழுதாக இல்லாமல் செய்வதற்கே இன்று சிங்கள பௌத்த பேரினவாதம் தொல்லியல் திணைக்களத்தை பயன்படுத்துவதாக  அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement