கஜேந்திரகுமார் பொன்னம்மபலம் இன்றே மருதங்கேணிக்கு சென்று வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று பொலிஸார் வலியுறுத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்தோடு அவரைக் கைது செய்யப் போவதாக மிரட்டுவது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும் இது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமையை மீறும் செயலாகும் என்றும் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளமை அடக்குமுறை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.